ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?
அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?
அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
| And in the fourteenth | וּבְאַרְבַּע֩ | ûbĕʾarbaʿ | oo-veh-ar-BA |
| עֶשְׂרֵ֨ה | ʿeśrē | es-RAY | |
| year | שָׁנָ֜ה | šānâ | sha-NA |
| came | בָּ֣א | bāʾ | ba |
| Chedorlaomer, | כְדָרְלָעֹ֗מֶר | kĕdorlāʿōmer | heh-dore-la-OH-mer |
| and the kings | וְהַמְּלָכִים֙ | wĕhammĕlākîm | veh-ha-meh-la-HEEM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were with | אִתּ֔וֹ | ʾittô | EE-toh |
| him, and smote | וַיַּכּ֤וּ | wayyakkû | va-YA-koo |
| אֶת | ʾet | et | |
| the Rephaims | רְפָאִים֙ | rĕpāʾîm | reh-fa-EEM |
| in Ashteroth Karnaim, | בְּעַשְׁתְּרֹ֣ת | bĕʿaštĕrōt | beh-ash-teh-ROTE |
| and the Zuzims | קַרְנַ֔יִם | qarnayim | kahr-NA-yeem |
| in Ham, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and the Emims | הַזּוּזִ֖ים | hazzûzîm | ha-zoo-ZEEM |
| in Shaveh Kiriathaim, | בְּהָ֑ם | bĕhām | beh-HAHM |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| הָֽאֵימִ֔ים | hāʾêmîm | ha-ay-MEEM | |
| בְּשָׁוֵ֖ה | bĕšāwē | beh-sha-VAY | |
| קִרְיָתָֽיִם׃ | qiryātāyim | keer-ya-TA-yeem |