இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| Therefore | לָכֵן֩ | lākēn | la-HANE |
| I will judge | אִ֨ישׁ | ʾîš | eesh |
| you, O house | כִּדְרָכָ֜יו | kidrākāyw | keed-ra-HAV |
| of Israel, | אֶשְׁפֹּ֤ט | ʾešpōṭ | esh-POTE |
| every one | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| according to his ways, | בֵּ֣ית | bêt | bate |
| saith | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| the Lord | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| God. | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| Repent, | יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE |
| and turn | שׁ֤וּבוּ | šûbû | SHOO-voo |
| yourselves from all | וְהָשִׁ֙יבוּ֙ | wĕhāšîbû | veh-ha-SHEE-VOO |
| your transgressions; | מִכָּל | mikkāl | mee-KAHL |
| so iniquity | פִּשְׁעֵיכֶ֔ם | pišʿêkem | peesh-ay-HEM |
| shall not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| be | יִהְיֶ֥ה | yihye | yee-YEH |
| your ruin. | לָכֶ֛ם | lākem | la-HEM |
| לְמִכְשׁ֖וֹל | lĕmikšôl | leh-meek-SHOLE | |
| עָוֹֽן׃ | ʿāwōn | ah-ONE |