மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.
இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.
பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| Yea, I will make many | וַהֲשִׁמּוֹתִ֨י | wahăšimmôtî | va-huh-shee-moh-TEE |
| people | עָלֶ֜יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| amazed | עַמִּ֣ים | ʿammîm | ah-MEEM |
| at | רַבִּ֗ים | rabbîm | ra-BEEM |
| thee, and their kings | וּמַלְכֵיהֶם֙ | ûmalkêhem | oo-mahl-hay-HEM |
| shall be horribly | יִשְׂעֲר֤וּ | yiśʿărû | yees-uh-ROO |
| afraid | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| for | שַׂ֔עַר | śaʿar | SA-ar |
| thee, when I shall brandish | בְּעוֹפְפִ֥י | bĕʿôpĕpî | beh-oh-feh-FEE |
| my sword | חַרְבִּ֖י | ḥarbî | hahr-BEE |
| before | עַל | ʿal | al |
| them; | פְּנֵיהֶ֑ם | pĕnêhem | peh-nay-HEM |
| and they shall tremble | וְחָרְד֤וּ | wĕḥordû | veh-hore-DOO |
| at every moment, | לִרְגָעִים֙ | lirgāʿîm | leer-ɡa-EEM |
| every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| for his own life, | לְנַפְשׁ֔וֹ | lĕnapšô | leh-nahf-SHOH |
| in the day | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
| of thy fall. | מַפַּלְתֶּֽךָ׃ | mappaltekā | ma-pahl-TEH-ha |