யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:
யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.
பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.
அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.
சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
| And all | וַיִּכְרְת֨וּ | wayyikrĕtû | va-yeek-reh-TOO |
| the people | גַם | gam | ɡahm |
| likewise | כָּל | kāl | kahl |
| cut down | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| every man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| his bough, | שׂוֹכֹ֗ה | śôkō | soh-HOH |
| and followed | וַיֵּ֨לְכ֜וּ | wayyēlĕkû | va-YAY-leh-HOO |
| אַֽחֲרֵ֤י | ʾaḥărê | ah-huh-RAY | |
| Abimelech, | אֲבִימֶ֙לֶךְ֙ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| and put | וַיָּשִׂ֣ימוּ | wayyāśîmû | va-ya-SEE-moo |
| them to | עַֽל | ʿal | al |
| the hold, | הַצְּרִ֔יחַ | haṣṣĕrîaḥ | ha-tseh-REE-ak |
| and set | וַיַּצִּ֧יתוּ | wayyaṣṣîtû | va-ya-TSEE-too |
| עֲלֵיהֶ֛ם | ʿălêhem | uh-lay-HEM | |
| the hold | אֶֽת | ʾet | et |
| on fire | הַצְּרִ֖יחַ | haṣṣĕrîaḥ | ha-tseh-REE-ak |
| upon | בָּאֵ֑שׁ | bāʾēš | ba-AYSH |
| them; so that all | וַיָּמֻ֜תוּ | wayyāmutû | va-ya-MOO-too |
| the men | גַּ֣ם | gam | ɡahm |
| of the tower | כָּל | kāl | kahl |
| of Shechem | אַנְשֵׁ֧י | ʾanšê | an-SHAY |
| died | מִֽגְדַּל | migĕddal | MEE-ɡeh-dahl |
| also, | שְׁכֶ֛ם | šĕkem | sheh-HEM |
| about a thousand | כְּאֶ֖לֶף | kĕʾelep | keh-EH-lef |
| men | אִ֥ישׁ | ʾîš | eesh |
| and women. | וְאִשָּֽׁה׃ | wĕʾiššâ | veh-ee-SHA |