சூழல் வசனங்கள் மாற்கு 4:20
மாற்கு 4:1

அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.

τὴν, καὶ, καὶ, τὴν, ἐπὶ
மாற்கு 4:2

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:

καὶ, καὶ
மாற்கு 4:4

அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.

καὶ, τὴν, καὶ, καὶ
மாற்கு 4:5

சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது.

ἐπὶ, γῆν, καὶ
மாற்கு 4:6

வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.

καὶ
மாற்கு 4:7

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது.

καὶ, καὶ, καὶ, καὶ
மாற்கு 4:8

சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.

καὶ, τὴν, γῆν, τὴν, καὶ, καὶ, καὶ, ἓν, τριάκοντα, καὶ, ἓν, ἑξήκοντα, καὶ, ἓν, ἑκατόν
மாற்கு 4:9

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.

καὶ
மாற்கு 4:10

அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.

οἱ, τὴν
மாற்கு 4:11

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

καὶ
மாற்கு 4:12

அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

καὶ, καὶ, καὶ, καὶ
மாற்கு 4:13

பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?

τὴν, καὶ
மாற்கு 4:14

விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.

τὸν, λόγον
மாற்கு 4:15

வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.

εἰσιν, οἱ, τὴν, καὶ, καὶ, τὸν, λόγον, τὸν
மாற்கு 4:16

அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,

καὶ, οὗτοί, εἰσιν, οἱ, ἐπὶ, τὸν, λόγον
மாற்கு 4:17

தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.

καὶ, εἰσιν, τὸν, λόγον
மாற்கு 4:18

வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;

καὶ, οὗτοί, εἰσιν, οἱ, οὗτοί, εἰσιν, οἱ, τὸν, λόγον
மாற்கு 4:19

இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.

καὶ, καὶ, καὶ, τὸν, λόγον, καὶ
மாற்கு 4:21

பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?

τὸν, τὴν, ἐπὶ, τὴν
மாற்கு 4:24

பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள், எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.

καὶ, ἀκούουσιν
மாற்கு 4:25

உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

καὶ, καὶ
மாற்கு 4:26

பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;

τὸν, ἐπὶ
மாற்கு 4:27

இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
மாற்கு 4:30

பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

τὴν
மாற்கு 4:31

அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;

ἐπὶ, ἐπὶ
மாற்கு 4:32

விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.

καὶ, καὶ, καὶ, τὴν
மாற்கு 4:33

அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

τὸν, λόγον
மாற்கு 4:36

அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது.

καὶ, τὸν, καὶ
மாற்கு 4:37

அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.

καὶ
மாற்கு 4:38

கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.

καὶ, ἐπὶ, ἐπὶ, καὶ, καὶ
மாற்கு 4:39

அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.

καὶ, καὶ, καὶ, καὶ
மாற்கு 4:40

அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

καὶ
மாற்கு 4:41

அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
these
οὗτοίhoutoiOO-TOO
are
εἰσινeisinees-een
they
which
are
sown
οἱhoioo

ἐπὶepiay-PEE
on
τὴνtēntane

γῆνgēngane
good
τὴνtēntane

καλὴνkalēnka-LANE
ground;
σπαρέντεςsparentesspa-RANE-tase
such
as
οἵτινεςhoitinesOO-tee-nase
hear
ἀκούουσινakouousinah-KOO-oo-seen
the
τὸνtontone
word,
λόγονlogonLOH-gone
and
καὶkaikay
receive
παραδέχονταιparadechontaipa-ra-THAY-hone-tay
it,
and
καὶkaikay
bring
forth
fruit,
καρποφοροῦσινkarpophorousinkahr-poh-foh-ROO-seen
some
ἓνhenane
thirtyfold,
τριάκονταtriakontatree-AH-kone-ta

καὶkaikay
some
ἓνhenane
sixty,
ἑξήκονταhexēkontaayks-A-kone-ta
and
καὶkaikay
some
ἓνhenane
an
hundred.
ἑκατόνhekatonake-ah-TONE