சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 11:16
வெளிப்படுத்தின விசேஷம் 11:1

பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.

καὶ, καὶ, τοῦ, θεοῦ, καὶ, καὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:2

ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

καὶ, τοῦ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:3

என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:4

பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

καὶ, ἐνώπιον, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 11:5

ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.

καὶ, τοῦ, αὐτῶν, καὶ, τοὺς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:6

அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

αὐτῶν, καὶ, ἐπὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:7

அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

καὶ, αὐτῶν, αὐτῶν, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:8

அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.

καὶ, τὰ, αὐτῶν, ἐπὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:9

ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ, τὰ, αὐτῶν, καὶ, καὶ, τὰ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 11:10

அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.

καὶ, οἱ, ἐπὶ, καὶ, καὶ, οἱ, τοὺς, ἐπὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:11

மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

καὶ, καὶ, τοῦ, θεοῦ, καὶ, ἐπὶ, τοὺς, αὐτῶν, καὶ, ἐπὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:12

இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

καὶ, τοῦ, καὶ, καὶ, οἱ, αὐτῶν
வெளிப்படுத்தின விசேஷம் 11:13

அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

καὶ, καὶ, τῷ, καὶ, οἱ, καὶ, τῷ, θεῷ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 11:15

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

καὶ, τῷ, τοῦ, τοῦ, καὶ, τοῦ, καὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:17

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 11:18

ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

καὶ, τὰ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, τοὺς
வெளிப்படுத்தின விசேஷம் 11:19

அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

καὶ, τοῦ, θεοῦ, τῷ, καὶ, τῷ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
the
οἱhoioo
four
εἴκοσιeikosiEE-koh-see
and
καὶkaikay
twenty
τέσσαρεςtessaresTASE-sa-rase
elders,
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
which
sat
οἱhoioo

ἐνώπιονenōpionane-OH-pee-one
before
τοῦtoutoo

θεοῦtheouthay-OO
God
καθήμενοιkathēmenoika-THAY-may-noo
on
ἐπὶepiay-PEE
their
τοὺςtoustoos

θρόνουςthronousTHROH-noos
seats,
αὐτῶνautōnaf-TONE
fell
ἔπεσανepesanA-pay-sahn
upon
ἐπὶepiay-PEE
their
τὰtata

πρόσωπαprosōpaPROSE-oh-pa
faces,
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
worshipped
προσεκύνησανprosekynēsanprose-ay-KYOO-nay-sahn

τῷtoh
God,
θεῷtheōthay-OH