சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 21:21
வெளிப்படுத்தின விசேஷம் 21:1

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

καὶ, καὶ, ἡ, καὶ, ἡ
வெளிப்படுத்தின விசேஷம் 21:2

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

καὶ, ὡς
வெளிப்படுத்தின விசேஷம் 21:3

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

καὶ, ἡ, τῶν, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:4

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

καὶ, τῶν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:5

சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

καὶ, οἱ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:6

அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

καὶ, καὶ, ἡ, καὶ, τῆς, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 21:7

ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:8

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:9

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

εἷς, τῶν, τῶν, τῶν, τῶν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:10

பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:11

அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

καὶ, ὡς
வெளிப்படுத்தின விசேஷம் 21:12

அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

καὶ, δώδεκα, καὶ, δώδεκα, καὶ, τῶν, δώδεκα, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 21:13

வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

πυλῶνες, πυλῶνες, πυλῶνες, πυλῶνες
வெளிப்படுத்தின விசேஷம் 21:14

நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

καὶ, τῆς, πόλεως, δώδεκα, καὶ, τῶν, δώδεκα
வெளிப்படுத்தின விசேஷம் 21:15

என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:16

அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.

καὶ, ἡ, καὶ, καὶ, καὶ, δώδεκα, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:17

அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.

καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:18

அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

καὶ, ἦν, ἡ, καὶ, ἡ, χρυσίον, καθαρὸν
வெளிப்படுத்தின விசேஷம் 21:19

நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

καὶ, οἱ, τῆς, πόλεως
வெளிப்படுத்தின விசேஷம் 21:22

அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:23

நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

καὶ, ἡ, τῆς, ἡ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:24

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

καὶ, τῶν, καὶ, οἱ, τῆς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 21:25

அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.

καὶ, οἱ, πυλῶνες
வெளிப்படுத்தின விசேஷம் 21:26

உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

καὶ, καὶ, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 21:27

தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

καὶ, καὶ, καὶ, οἱ, τῆς
And
καὶkaikay
the
οἱhoioo
twelve
δώδεκαdōdekaTHOH-thay-ka
gates
πυλῶνεςpylōnespyoo-LOH-nase
were
twelve
δώδεκαdōdekaTHOH-thay-ka
pearls;
μαργαρῖταιmargaritaimahr-ga-REE-tay

ἀνὰanaah-NA
every
εἷςheisees
several
ἕκαστοςhekastosAKE-ah-stose
gate
τῶνtōntone
was
πυλώνωνpylōnōnpyoo-LOH-none
of
ἦνēnane
one
ἐξexayks
pearl:
ἑνὸςhenosane-OSE
and
μαργαρίτουmargaritoumahr-ga-REE-too
the
καὶkaikay
street
ay
of
the
πλατεῖαplateiapla-TEE-ah
city
τῆςtēstase
was
pure
πόλεωςpoleōsPOH-lay-ose
gold,
χρυσίονchrysionhryoo-SEE-one
as
it
were
καθαρὸνkatharonka-tha-RONE
transparent
ὡςhōsose
glass.
ὕαλοςhyalosYOO-ah-lose


διαφανήςdiaphanēsthee-ah-fa-NASE