சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 5:10
வெளிப்படுத்தின விசேஷம் 5:1

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

ἐπὶ, ἐπὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:2

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:3

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.

καὶ, τῷ, ἐπὶ, τῆς, γῆς, τῆς, γῆς
வெளிப்படுத்தின விசேஷம் 5:4

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:5

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

καὶ, τῆς, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:6

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:7

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

καὶ, καὶ, τῆς, ἐπὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:8

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:9

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

καὶ, καὶ, καὶ, τῷ, θεῷ, ἡμᾶς, τῷ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:11

பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:12

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:13

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

καὶ, τῷ, καὶ, καὶ, τῆς, γῆς, καὶ, ἐπὶ, τῆς, καὶ, ἐπὶ, καὶ, τῷ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 5:14

அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
hast
made
ἐποίησαςepoiēsasay-POO-ay-sahs
us
ἡμᾶςhēmasay-MAHS

God
τῷtoh
unto
θεῷtheōthay-OH
our
ἡμῶνhēmōnay-MONE
kings
βασιλεῖςbasileisva-see-LEES
and
καὶkaikay
priests:
ἱερεῖςhiereisee-ay-REES
and
καὶkaikay
we
shall
reign
βασιλεύσομενbasileusomenva-see-LAYF-soh-mane
on
ἐπὶepiay-PEE
the
τῆςtēstase
earth.
γῆςgēsgase