சூழல் வசனங்கள் சகரியா 1:11
சகரியா 1:1

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:

יְהוָ֗ה
சகரியா 1:6

இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.

אֶת
சகரியா 1:7

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:

יְהוָ֗ה
சகரியா 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

אֶת
சகரியா 1:13

அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.

יְהוָ֗ה, אֶת
சகரியா 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

יְהוָ֗ה
சகரியா 1:17

இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

אֶת
சகரியா 1:18

நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.

אֶת
சகரியா 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֶת, אֶת
சகரியா 1:21

இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

אֶת, אֶת
And
they
answered
וַֽיַּעֲנ֞וּwayyaʿănûva-ya-uh-NOO

אֶתʾetet
the
angel
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
of
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
stood
הָֽעֹמֵד֙hāʿōmēdha-oh-MADE
among
בֵּ֣יןbênbane
the
myrtle
trees,
הַהֲדַסִּ֔יםhahădassîmha-huh-da-SEEM
and
said,
וַיֹּאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
We
have
walked
to
and
fro
הִתְהַלַּ֣כְנוּhithallaknûheet-ha-LAHK-noo
through
the
earth,
בָאָ֑רֶץbāʾāreṣva-AH-rets
and,
behold,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
all
כָלkālhahl
the
earth
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
sitteth
still,
יֹשֶׁ֥בֶתyōšebetyoh-SHEH-vet
and
is
at
rest.
וְשֹׁקָֽטֶת׃wĕšōqāṭetveh-shoh-KA-tet