அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல், காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.
உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படி தண்டித்தாலும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| The remnant | שְׁאֵרִ֨ית | šĕʾērît | sheh-ay-REET |
| of Israel | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| shall not | לֹֽא | lōʾ | loh |
| do | יַעֲשׂ֤וּ | yaʿăśû | ya-uh-SOO |
| iniquity, | עַוְלָה֙ | ʿawlāh | av-LA |
| nor | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| speak | יְדַבְּר֣וּ | yĕdabbĕrû | yeh-da-beh-ROO |
| lies; | כָזָ֔ב | kāzāb | ha-ZAHV |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| shall a deceitful | יִמָּצֵ֥א | yimmāṣēʾ | yee-ma-TSAY |
| tongue | בְּפִיהֶ֖ם | bĕpîhem | beh-fee-HEM |
| be found | לְשׁ֣וֹן | lĕšôn | leh-SHONE |
| in their mouth: | תַּרְמִ֑ית | tarmît | tahr-MEET |
| for | כִּֽי | kî | kee |
| they | הֵ֛מָּה | hēmmâ | HAY-ma |
| shall feed | יִרְע֥וּ | yirʿû | yeer-OO |
| and lie down, | וְרָבְצ֖וּ | wĕrobṣû | veh-rove-TSOO |
| and none | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| shall make them afraid. | מַחֲרִֽיד׃ | maḥărîd | ma-huh-REED |