ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,
எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்.
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
| Now | כְּעַ֞ן | kĕʿan | keh-AN |
| if | הֵ֧ן | hēn | hane |
| ye be | אִֽיתֵיכ֣וֹן | ʾîtêkôn | ee-tay-HONE |
| ready | עֲתִידִ֗ין | ʿătîdîn | uh-tee-DEEN |
| that | דִּ֣י | dî | dee |
| at what | בְעִדָּנָ֡א | bĕʿiddānāʾ | veh-ee-da-NA |
| time | דִּֽי | dî | dee |
| ye hear | תִשְׁמְע֡וּן | tišmĕʿûn | teesh-meh-OON |
| the sound | קָ֣ל | qāl | kahl |
| of the cornet, | קַרְנָ֣א | qarnāʾ | kahr-NA |
| flute, | מַשְׁרוֹקִיתָ֣א | mašrôqîtāʾ | mahsh-roh-kee-TA |
| harp, | קַיְת֣רֹס | qaytrōs | kai-T-rose |
| sackbut, | שַׂבְּכָ֡א | śabbĕkāʾ | sa-beh-HA |
| psaltery, | פְּסַנְתֵּרִין֩ | pĕsantērîn | peh-sahn-tay-REEN |
| and dulcimer, | וְסוּמְפֹּ֨נְיָ֜ה | wĕsûmĕppōnĕyâ | veh-soo-meh-POH-neh-YA |
| and all | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
| kinds | זְנֵ֣י | zĕnê | zeh-NAY |
| of musick, | זְמָרָ֗א | zĕmārāʾ | zeh-ma-RA |
| ye fall down | תִּפְּל֣וּן | tippĕlûn | tee-peh-LOON |
| and worship | וְתִסְגְּדוּן֮ | wĕtisgĕdûn | veh-tees-ɡeh-DOON |
| the image | לְצַלְמָ֣א | lĕṣalmāʾ | leh-tsahl-MA |
| which | דִֽי | dî | dee |
| I have made; | עַבְדֵת֒ | ʿabdēt | av-DATE |
| well: but if | וְהֵן֙ | wĕhēn | veh-HANE |
| ye worship | לָ֣א | lāʾ | la |
| not, | תִסְגְּד֔וּן | tisgĕdûn | tees-ɡeh-DOON |
| ye shall be cast | בַּהּ | bah | ba |
| the same hour | שַֽׁעֲתָ֣א | šaʿătāʾ | sha-uh-TA |
| into the midst | תִתְרְמ֔וֹן | titrĕmôn | teet-reh-MONE |
| of a burning | לְגֽוֹא | lĕgôʾ | leh-ɡOH |
| fiery | אַתּ֥וּן | ʾattûn | AH-toon |
| furnace; | נוּרָ֖א | nûrāʾ | noo-RA |
| and who | יָקִֽדְתָּ֑א | yāqidĕttāʾ | ya-kee-deh-TA |
| is that | וּמַן | ûman | oo-MAHN |
| God | ה֣וּא | hûʾ | hoo |
| that | אֱלָ֔הּ | ʾĕlāh | ay-LA |
| shall deliver | דֵּ֥י | dê | day |
| you out of | יְשֵֽׁיזְבִנְכ֖וֹן | yĕšêzĕbinkôn | yeh-shay-zeh-veen-HONE |
| my hands? | מִן | min | meen |
| יְדָֽי׃ | yĕdāy | yeh-DAI |