மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?
ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.
அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.
அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.
| Yet, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| therein shall be left | נֽוֹתְרָה | nôtĕrâ | NOH-teh-ra |
| a remnant | בָּ֜הּ | bāh | ba |
| that shall be brought forth, | פְּלֵטָ֗ה | pĕlēṭâ | peh-lay-TA |
| both sons | הַֽמּוּצָאִים֮ | hammûṣāʾîm | ha-moo-tsa-EEM |
| and daughters: | בָּנִ֣ים | bānîm | ba-NEEM |
| behold, | וּבָנוֹת֒ | ûbānôt | oo-va-NOTE |
| they shall come forth | הִנָּם֙ | hinnām | hee-NAHM |
| unto | יוֹצְאִ֣ים | yôṣĕʾîm | yoh-tseh-EEM |
| you, and ye shall see | אֲלֵיכֶ֔ם | ʾălêkem | uh-lay-HEM |
| וּרְאִיתֶ֥ם | ûrĕʾîtem | oo-reh-ee-TEM | |
| their way | אֶת | ʾet | et |
| and their doings: | דַּרְכָּ֖ם | darkām | dahr-KAHM |
| and ye shall be comforted | וְאֶת | wĕʾet | veh-ET |
| concerning | עֲלִֽילוֹתָ֑ם | ʿălîlôtām | uh-lee-loh-TAHM |
| the evil | וְנִחַמְתֶּ֗ם | wĕniḥamtem | veh-nee-hahm-TEM |
| that | עַל | ʿal | al |
| I have brought | הָֽרָעָה֙ | hārāʿāh | ha-ra-AH |
| upon | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| Jerusalem, | הֵבֵ֙אתִי֙ | hēbēʾtiy | hay-VAY-TEE |
| even concerning | עַל | ʿal | al |
| all | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
| that | אֵ֛ת | ʾēt | ate |
| I have brought | כָּל | kāl | kahl |
| upon | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| it. | הֵבֵ֖אתִי | hēbēʾtî | hay-VAY-tee |
| עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |