மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.
இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.
மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.
| Thine heart | גָּבַ֤הּ | gābah | ɡa-VA |
| was lifted up | לִבְּךָ֙ | libbĕkā | lee-beh-HA |
| because of thy beauty, | בְּיָפְיֶ֔ךָ | bĕyopyekā | beh-yofe-YEH-ha |
| thou hast corrupted | שִׁחַ֥תָּ | šiḥattā | shee-HA-ta |
| thy wisdom | חָכְמָתְךָ֖ | ḥokmotkā | hoke-mote-HA |
| by reason of | עַל | ʿal | al |
| thy brightness: | יִפְעָתֶ֑ךָ | yipʿātekā | yeef-ah-TEH-ha |
| I will cast | עַל | ʿal | al |
| thee to | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| the ground, | הִשְׁלַכְתִּ֗יךָ | hišlaktîkā | heesh-lahk-TEE-ha |
| I will lay | לִפְנֵ֧י | lipnê | leef-NAY |
| thee before | מְלָכִ֛ים | mĕlākîm | meh-la-HEEM |
| kings, | נְתַתִּ֖יךָ | nĕtattîkā | neh-ta-TEE-ha |
| that they may behold | לְרַ֥אֲוָה | lĕraʾăwâ | leh-RA-uh-va |
| thee. | בָֽךְ׃ | bāk | vahk |