இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை,
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.
வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.
அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும்,
அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.
நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்களது, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.
சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும் தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள்.
| And I sent them with commandment | וָאֲוּצַאֶ֤ה | wāʾăwwṣaʾe | va-uh-wtsa-EH |
| אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM | |
| unto | עַל | ʿal | al |
| Iddo | אִדּ֣וֹ | ʾiddô | EE-doh |
| the chief | הָרֹ֔אשׁ | hārōš | ha-ROHSH |
| at the place | בְּכָֽסִפְיָ֖א | bĕkāsipyāʾ | beh-ha-seef-YA |
| Casiphia, | הַמָּק֑וֹם | hammāqôm | ha-ma-KOME |
| and I told | וָֽאָשִׂימָה֩ | wāʾāśîmāh | va-ah-see-MA |
| בְּפִיהֶ֨ם | bĕpîhem | beh-fee-HEM | |
| them what | דְּבָרִ֜ים | dĕbārîm | deh-va-REEM |
| they should say | לְ֠דַבֵּר | lĕdabbēr | LEH-da-bare |
| unto | אֶל | ʾel | el |
| Iddo, | אִדּ֨וֹ | ʾiddô | EE-doh |
| and to his brethren | אָחִ֤יו | ʾāḥîw | ah-HEEOO |
| the Nethinims, | הַנְּתִונִים֙ | hannĕtiwnîm | ha-neh-teev-NEEM |
| at the place | בְּכָֽסִפְיָ֣א | bĕkāsipyāʾ | beh-ha-seef-YA |
| Casiphia, | הַמָּק֔וֹם | hammāqôm | ha-ma-KOME |
| that they should bring | לְהָֽבִיא | lĕhābîʾ | leh-HA-vee |
| unto us ministers | לָ֥נוּ | lānû | LA-noo |
| for the house | מְשָֽׁרְתִ֖ים | mĕšārĕtîm | meh-sha-reh-TEEM |
| of our God. | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
| אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |