நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
| The priests | הַכֹּהֲנִ֗ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| said | לֹ֤א | lōʾ | loh |
| not, | אָֽמְרוּ֙ | ʾāmĕrû | ah-meh-ROO |
| Where | אַיֵּ֣ה | ʾayyē | ah-YAY |
| is the Lord? | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and they that handle | וְתֹפְשֵׂ֤י | wĕtōpĕśê | veh-toh-feh-SAY |
| the law | הַתּוֹרָה֙ | hattôrāh | ha-toh-RA |
| knew | לֹ֣א | lōʾ | loh |
| me not: | יְדָע֔וּנִי | yĕdāʿûnî | yeh-da-OO-nee |
| the pastors | וְהָרֹעִ֖ים | wĕhārōʿîm | veh-ha-roh-EEM |
| also transgressed | פָּ֣שְׁעוּ | pāšĕʿû | PA-sheh-oo |
| against me, and the prophets | בִ֑י | bî | vee |
| prophesied | וְהַנְּבִיאִים֙ | wĕhannĕbîʾîm | veh-ha-neh-vee-EEM |
| by Baal, | נִבְּא֣וּ | nibbĕʾû | nee-beh-OO |
| and walked | בַבַּ֔עַל | babbaʿal | va-BA-al |
| after | וְאַחֲרֵ֥י | wĕʾaḥărê | veh-ah-huh-RAY |
| things that do not | לֹֽא | lōʾ | loh |
| profit. | יוֹעִ֖לוּ | yôʿilû | yoh-EE-loo |
| הָלָֽכוּ׃ | hālākû | ha-la-HOO |