சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 10:2
வெளிப்படுத்தின விசேஷம் 10:1

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

καὶ, ἐπὶ, καὶ, αὐτοῦ, καὶ, αὐτοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 10:3

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:4

அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:5

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

ἐπὶ, καὶ, ἐπὶ, τὴν, αὐτοῦ, τὸν
வெளிப்படுத்தின விசேஷம் 10:6

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

καὶ, ἐν, τὸν, καὶ, ἐν, καὶ, τὴν, καὶ, ἐν, καὶ, τὴν, καὶ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 10:7

வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

ἐν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:8

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

καὶ, βιβλαρίδιον, ἐν, τῇ, χειρὶ, ἐπὶ, καὶ, ἐπὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:9

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

καὶ, τὸν, βιβλαρίδιον, καὶ, καὶ, καὶ, τὴν, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 10:10

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

καὶ, βιβλαρίδιον, καὶ, καὶ, ἐν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:11

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

καὶ, ἐπὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
he
had
εἴχενeichenEE-hane
in
ἐνenane
his
τῇtay
hand
little
χειρὶcheirihee-REE
a
αὐτοῦautouaf-TOO
book
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
open:
ἀνεῳγμένον·aneōgmenonah-nay-oge-MAY-none
and
καὶkaikay
he
set
ἔθηκενethēkenA-thay-kane
his
τὸνtontone

πόδαpodaPOH-tha
right
αὐτοῦautouaf-TOO

τὸνtontone
foot
δεξιὸνdexionthay-ksee-ONE
upon
ἐπὶepiay-PEE
the
τὴνtēntane
sea,
θάλασσαν,thalassanTHA-lahs-sahn

τὸνtontone
and
δὲdethay
his
left
εὐώνυμονeuōnymonave-OH-nyoo-mone
foot
on
ἐπὶepiay-PEE
the
τὴνtēntane
earth,
γῆν,gēngane