அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீர் எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலுூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும்.
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.
இது எகிப்தியருடைய பாவத்துக்கும் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.
அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.
| For I will gather | וְאָסַפְתִּ֨י | wĕʾāsaptî | veh-ah-sahf-TEE |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| nations | הַגּוֹיִ֥ם׀ | haggôyim | ha-ɡoh-YEEM |
| against | אֶֽל | ʾel | el |
| Jerusalem | יְרוּשָׁלִַם֮ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| to battle; | לַמִּלְחָמָה֒ | lammilḥāmāh | la-meel-ha-MA |
| and the city | וְנִלְכְּדָ֣ה | wĕnilkĕdâ | veh-neel-keh-DA |
| shall be taken, | הָעִ֗יר | hāʿîr | ha-EER |
| and the houses | וְנָשַׁ֙סּוּ֙ | wĕnāšassû | veh-na-SHA-SOO |
| rifled, | הַבָּ֣תִּ֔ים | habbāttîm | ha-BA-TEEM |
| and the women | וְהַנָּשִׁ֖ים | wĕhannāšîm | veh-ha-na-SHEEM |
| ravished; | תִּשָּׁגַ֑לְנָה | tiššāgalnâ | tee-sha-ɡAHL-na |
| and half | וְיָצָ֞א | wĕyāṣāʾ | veh-ya-TSA |
| of the city | חֲצִ֤י | ḥăṣî | huh-TSEE |
| shall go forth | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| into captivity, | בַּגּוֹלָ֔ה | baggôlâ | ba-ɡoh-LA |
| and the residue | וְיֶ֣תֶר | wĕyeter | veh-YEH-ter |
| of the people | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| shall not | לֹ֥א | lōʾ | loh |
| be cut off | יִכָּרֵ֖ת | yikkārēt | yee-ka-RATE |
| from | מִן | min | meen |
| the city. | הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |