இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியήாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
| And the earth | וְהָאָ֗רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| was | הָיְתָ֥ה | hāytâ | hai-TA |
| without form, | תֹ֙הוּ֙ | tōhû | TOH-HOO |
| and void; | וָבֹ֔הוּ | wābōhû | va-VOH-hoo |
| and darkness | וְחֹ֖שֶׁךְ | wĕḥōšek | veh-HOH-shek |
| was upon | עַל | ʿal | al |
| the face | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of the deep. | תְה֑וֹם | tĕhôm | teh-HOME |
| And the Spirit | וְר֣וּחַ | wĕrûaḥ | veh-ROO-ak |
| of God | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| moved | מְרַחֶ֖פֶת | mĕraḥepet | meh-ra-HEH-fet |
| upon | עַל | ʿal | al |
| the face | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| of the waters. | הַמָּֽיִם׃ | hammāyim | ha-MA-yeem |