கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.
அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.
இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.
அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும்.
அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார்.
அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.
| Now when | וְכִֽי | wĕkî | veh-HEE |
| the prince | יַעֲשֶׂה֩ | yaʿăśeh | ya-uh-SEH |
| shall prepare | הַנָּשִׂ֨יא | hannāśîʾ | ha-na-SEE |
| a voluntary | נְדָבָ֜ה | nĕdābâ | neh-da-VA |
| burnt offering | עוֹלָ֣ה | ʿôlâ | oh-LA |
| or | אֽוֹ | ʾô | oh |
| peace offerings | שְׁלָמִים֮ | šĕlāmîm | sheh-la-MEEM |
| voluntarily | נְדָבָ֣ה | nĕdābâ | neh-da-VA |
| unto the Lord, | לַֽיהוָה֒ | layhwāh | lai-VA |
| one shall then open | וּפָ֣תַֽח | ûpātaḥ | oo-FA-tahk |
| him | ל֗וֹ | lô | loh |
| the gate | אֶת | ʾet | et |
| that looketh | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| toward the east, | הַפֹּנֶ֣ה | happōne | ha-poh-NEH |
| and he shall prepare | קָדִ֔ים | qādîm | ka-DEEM |
| וְעָשָׂ֤ה | wĕʿāśâ | veh-ah-SA | |
| his burnt offering | אֶת | ʾet | et |
| and his peace offerings, | עֹֽלָתוֹ֙ | ʿōlātô | oh-la-TOH |
| as | וְאֶת | wĕʾet | veh-ET |
| he did | שְׁלָמָ֔יו | šĕlāmāyw | sheh-la-MAV |
| on the sabbath | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| day: | יַעֲשֶׂ֖ה | yaʿăśe | ya-uh-SEH |
| then he shall go forth; | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| and after | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| his going forth | וְיָצָ֛א | wĕyāṣāʾ | veh-ya-TSA |
| one shall shut | וְסָגַ֥ר | wĕsāgar | veh-sa-ɡAHR |
| אֶת | ʾet | et | |
| the gate. | הַשַּׁ֖עַר | haššaʿar | ha-SHA-ar |
| אַחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| צֵאתֽוֹ׃ | ṣēʾtô | tsay-TOH |