நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.
எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
| And the messengers | וַיָּשֻׁ֙בוּ֙ | wayyāšubû | va-ya-SHOO-VOO |
| returned | הַמַּלְאָכִ֔ים | hammalʾākîm | ha-mahl-ah-HEEM |
| to | אֶֽל | ʾel | el |
| Jacob, | יַעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| We came | בָּ֤אנוּ | bāʾnû | BA-noo |
| to | אֶל | ʾel | el |
| thy brother | אָחִ֙יךָ֙ | ʾāḥîkā | ah-HEE-HA |
| Esau, | אֶל | ʾel | el |
| and also | עֵשָׂ֔ו | ʿēśāw | ay-SAHV |
| he cometh | וְגַם֙ | wĕgam | veh-ɡAHM |
| to meet thee, | הֹלֵ֣ךְ | hōlēk | hoh-LAKE |
| and four | לִקְרָֽאתְךָ֔ | liqrāʾtĕkā | leek-ra-teh-HA |
| hundred | וְאַרְבַּע | wĕʾarbaʿ | veh-ar-BA |
| men | מֵא֥וֹת | mēʾôt | may-OTE |
| with | אִ֖ישׁ | ʾîš | eesh |
| him. | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |